மூங்கில்
பகலிலும் அலறும் ஆந்தை
> > கள்ளிச் செடி
> > காய்ந்த சருகு – அதில்
> > சரசரவென ஓடி ஒளியும் பாம்பு
> > மண்ணெண்ய் வாசத்துடன்
> > குபுகுபுவென எரியும் சவத்தீ!
> > சுழன்று அடிக்கும் காற்றில்
> > கனன்று பறக்கும் சாம்பல்
> > கால் இடறும் எலும்புகள்,
> > அடையாளங்களோடு
> > பிணம் காத்து
> > உக்காந்து இருக்கு சுடுகாடு
> > ஊருக்கு ஒதுக்குப்புறமாய்!
> >
> > – ப்ரியன்.